Maha Maha Periyathu – மகா மகா பெரியது

 Maha Maha Periyathu – மகா மகா பெரியது


மகா மகா பெரியது உம் இரக்கம்

ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை


தேற்றிடும் கிருபை

உயிர்ப்பிக்கும் கிருபை

விலகாத மாறாத கிருபை


1. மிகக் கொடிய வேதனையில்

இடுக்கண்கள் மத்தியில்

விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2

கொள்ளைநோய் விலகனும்

ஜனங்கள் வாழனும்

உம் நாமம் உயரனுமே – 4


உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2


2. பெலவீனங்களைக் குறித்து

பரிதவிக்கும் மிகப்பெரிய

பிரதான ஆசாரியரே – 2

ஏற்ற வேளை உதவி செய்யும்

கிருபையை நான் நம்பியே

கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4


உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2


3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்

குற்றங்கள் அகற்றுகின்ற

கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2

பூலோகம் பரலோகம்

எவ்வளவு உயர்ந்ததோ

அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4


உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2


4. திருப்பாதம் காத்திருந்து

மன்றாடும் பிள்ளைகள் மேல்

மனதுருகும் நல்ல தகப்பனே – 2

பஞ்சத்திலே பசியாற்ற

நோயிலிருந்து காப்பாற்ற

நோக்கமாய் இருப்பவரே – 4


உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2





Post a Comment (0)
Previous Post Next Post